News August 8, 2025

11ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் 2ஆம் சுற்று குடற்புழு நீக்க முகாம் 11ஆம் தேதி மற்றும் விடுபட்டவர்களுக்கு 18ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு தடுப்பு மாத்திரை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 8, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விவரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 8, 2025

தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருது பெற வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2025ம் ஆண்டிற்கான “தமிழ் செம்மல்” விருதுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithuraiin..gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் 28ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

News August 8, 2025

நெல்லை வழியாக சுதந்திர தின சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரயில் ஆகஸ்ட் 14 வியாழன் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கோட்டை – சென்னை: ஆகஸ்ட் 17 ஞாயிறு இரவு 7.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!