News March 15, 2025

10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தயாராகும் கல்வித்துறை

image

திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 30,235 மாணவர்கள், 1,097 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். 108 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1,780 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் www.dge.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திலோ அல்லது ஒரு நாள் முன்பே பெறலாம்.

Similar News

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

திருப்பூரில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 17, 2025

திருப்பூர்: 1100 பேருக்கு புதிய பாஸ்போர்ட்

image

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி திறக்கப்பட்டது. திருப்பூரில் துவங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி 24 முதல் மார்ச் 14 வரை 1,400 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 1,100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளும் மாணவிக்கு உதவி

image

திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகளான 5ஆம் வகுப்பு பயிலும் மாணவி தியாக்ஷ்மி நேபாள நாட்டில் நடைபெறும் சர்வதேச கராத்தே மற்றும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்கிறார். இதையறிந்த இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் மாணவியின் பயணச்செலவை ஏற்றுக்கொண்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நேற்று தியாக்ஷ்மியிடம் ரூ.60 ஆயிரம் வழங்கினார்.

error: Content is protected !!