News March 27, 2025

10ம் வகுப்பு பொதுத் தேர்வு 38,483 மாணவர்கள் எழுதுகின்றனர்

image

மதுரை மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. முதல் நாள் மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கிலம் ஏப்ரல் 4-ம் தேதி மொழிப்பாடம் ஏப்ரல் 7-ஆம் தேதி கணிதம் ஏப்ரல் 11-ல் அறிவியல் ஏப்ரல் 15 இல் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 486 பள்ளிகள் சேர்ந்த 38,483 பேர் பத்தாம் வகுப்பு எழுதவுள்ளனர்.

Similar News

News April 5, 2025

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் காவல்துறையினரின் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

News April 5, 2025

மதுரை மக்களே உஷார்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

image

மாநிலத்தின் பல பகுதியில் தக்காளிக்காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது தோலில் சிவப்பு நிற அரிப்பு ஏற்படுத்தும் மற்றும் பரவும் அபாயம் உள்ள நோயாகும். தங்கிய நீர், அசுத்தமான சூழல் போன்றவை இதன் முக்கிய காரணங்கள் என்பதால், பொதுசுகாதார நிபுணர்கள் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

News April 5, 2025

மதுரையில் டெங்கு பாதிப்பு குறைந்தது- சுகாதாரத்துறை அதிகாரிகள்

image

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 530 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டமிட்ட நடவடிக்கையின் பயனாக, 2023ஆம் ஆண்டில் இருந்த 835 டெங்கு பாதிப்பு 2024ஆம் ஆண்டில் 348 ஆகக் குறைந்துள்ளது, இது 41.48% குறைவாகும். மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சுகாதார நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!