News May 10, 2024
10th Result : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியான நிலையில், வரும் 13ஆம் தேதி ( திங்கட்கிழமை) முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவர்கள் வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
அஸ்வினை எடுக்க போட்டி போடும் ஆஸி., அணிகள்

ஆஸ்திரேலியாவின் IPL-ஆன Big Bash League தொடரில் அஸ்வினை எடுக்க, பல்வேறு அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே, UAE-ல் டிச.2-ம் தேதி தொடங்க உள்ள ILT20 தொடருக்கான ஏலத்திற்கு அவர் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், டிச.14-ம் தேதி தொடங்க உள்ள Big Bash League-ல் அவருக்கான மவுசு அதிகரித்துள்ளதால், 2 தொடர்களிலும் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 23, 2025
தவெக தனித்து ஆட்சி அமைக்கும்: அருண்ராஜ்

தவெக 30% வாக்கு வங்கியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு வருவது பணம் கொடுப்பதால் வரும் கூட்டம். ஆனால், விஜய்க்கு வருவது தன்னெழுச்சியான கூட்டம் எனக் கூறிய அவர், தற்போது எடுக்கப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகள் தவெகவுக்கு சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
News September 23, 2025
விலை குறையலையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

நாடு முழுவதும் GST வரி சீர்த்திருத்தம் அமலுக்கு வந்துள்ளதால் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை என்றால் உங்களால் புகாரளிக்க முடியும். 1800-11-4000 (அ) https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக புகாரளிக்கலாம். முதல்நாளிலேயே 100 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.