News March 26, 2024
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8 வரை 4,107 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உள்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்.12-22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.
Similar News
News October 26, 2025
மாரியின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்

‘பைசன்’ படக்குழுவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாரிசெல்வராஜ் தனது படங்களில் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை என்றும், இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருப்பதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News October 26, 2025
சளி, தொண்டை வலியா? உடனடி தீர்வு

மழைகாலம் வந்தால் சளியும் இருமலும் நாம் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி மீளலாம். முதலில் வெதுவெதுப்பான நீரில் துளசியை போட்டு வாய் கொப்பளித்து, சிறிய துண்டு இஞ்சியில் உப்பு தடவி சில நிமிடங்களுக்கு நன்கு மென்று சாற்றை விழுங்குங்கள் போதும். அவ்வளவு தான் நல்ல பலன் கிடைக்கும், வந்த வலி பஞ்சாக பறக்கும்.
News October 26, 2025
திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு: சீமான்

சென்னையில் பேனா மை கொட்டியதற்காக 5-ம் வகுப்பு சிறுமியை தலைமை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை ஆசிரியன் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். திமுக வட்டச்செயலாளரின் தலையிட்டால் போலீஸ் தலையிடவில்லையா என கேள்வி எழுப்பிய அவர், இது திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு எனவும் விமர்சித்துள்ளார்.


