News March 18, 2025

10th பொதுத்தேர்வு: குமரயில் 22,044 பேருக்கு ஹால் டிக்கெட்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தேர்வினை 22 ஆயிரத்து 44 மாணவ மாணவிகள் எழுதியிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம் நேற்று(மார்ச் 17) தொடங்கியது.

Similar News

News March 19, 2025

நியாய விலை கடைகளில் சரியான அளவில் பொருட்கள் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் சரியான முறையில் அனுப்பப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் எந்த ஒரு புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் சரியான அளவில் பொருட்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் கூறியுள்ளார்.

News March 18, 2025

குமரியில் திருமணத்தடை நீங்க செல்ல வேண்டிய கோயில்

image

குமரி, கருங்கல்லில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பகவதி அம்மன் கோவில் உள்ளது. தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 10 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த பகவதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறி கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், சுயம்வர அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும்.*SHARE TO FRDS

News March 18, 2025

இன்று புறப்படும் குமரி – மும்பை ரயில் 2.30 மணி நேரம் தாமதம்

image

கன்னியாகுமரி – மும்பை CST சிறப்பு ரயில்(எண் 01006) இன்று(மார்ச் 18) பிற்பகல 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டியிருந்தது. இணை ரயில் தாமதமாக வந்த காரணத்தால் 2 மணி 30 நிமிடம் தாமதம், மாலை 16.45 மணிக்கு CST சிறப்பு ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.

error: Content is protected !!