News November 22, 2024

108 ஆம்புலன்ஸ் மூலம் நடப்பாண்டு 68,763 பேர் பயன்

image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டில் இதுவரை 68,763 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர் என 108 ஆம்புலன்ஸ் சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார். இதில் விபத்தில் சிக்கி காயமடைந்த 12,430 பேரும், விஷம் குடித்த 5,445 பேரும், இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 4,152 பேரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Similar News

News July 11, 2025

பணம் இரட்டிப்பு மோசடியில் கைதான தம்பதிக்கு ஜாமீன்!

image

சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாஸ்டர் செந்தில்குமார், அவரது மனைவி கரோலின் ஜான்சி ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

News July 11, 2025

சேலம்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

➡️ சேலம் மாவட்டத்தில் நாளை 76,999 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.

➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.

➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.

➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.

➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.

➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.

➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 11, 2025

நாட்டுக்கோழி வளர்ப்பு: இலவச பயிற்சிக்கு அழைப்பு!

image

பனமரத்துப்பட்டி சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி 26 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சியில் கோழி வளர்ப்பு, தீவனம் தயாரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 994178451 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!