News March 25, 2025

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கை

image

ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் மாவட்ட நேரடி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்,108 ஆம்புலன்ஸில் 6 ஆயிரத்திற்கும் மேல் தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும். மேலும் இந்த ஆண்டு ஊதிய உயர்வை 30 சதவீதம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News

News April 3, 2025

இரவு நேரத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்ட முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (02.04.2025) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலைபேசி எண்ணை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News April 2, 2025

அரியலூரில் 1000 ஆண்டு பழமையான ஜமதக்னீஸ்வரர் கோயில்

image

அரியலூர் அருகே அமைந்துள்ளது இந்த ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில். இது 1166 இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. வயிற்றுவலி, கண்நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வணங்கி செல்கின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். நண்பர்களுக்கு இதை பகிரவும்.

News April 2, 2025

அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!