News November 22, 2024

108 ஆம்புலன்ஸ் மூலம் நடப்பாண்டு 68,763 பேர் பயன்

image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டில் இதுவரை 68,763 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர் என 108 ஆம்புலன்ஸ் சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார். இதில் விபத்தில் சிக்கி காயமடைந்த 12,430 பேரும், விஷம் குடித்த 5,445 பேரும், இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 4,152 பேரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Similar News

News December 13, 2025

சேலம் ரவுடி மனைவி எடுத்த விபரீத முடிவு!

image

சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார் கான்வென்ட் சாலையை சேர்ந்த, ரவுடி அஜித்குமார். இவரது மனைவி சவுமியா (30). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அஜித்குமார், மனைவியிடையே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சவுமியா தற்கொலை செய்து கொண்டார். அழகாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

News December 13, 2025

ஆத்தூர் அருகே ஷாக் கொடுத்த அதிகாரிகள்!

image

ஆத்தூர்:கெங்கவல்லி சுவேத நதி – நடுவலூர் ஏரி நீர்வழி வாய்க்காலை ஆக்கிரமித்துக் 30 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவர்களுக்கு செப். 12 அன்று ஓதியத்தூரில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு டிச.8க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகள் அறிவுறித்தினர். இந்தநிலையில் கூடுதல் அவகாசம் கேட்ட 6 பேரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்புகளை துண்டித்த அதிகாரிகள் உடனடியாக காலிசெய்ய உத்தரவிட்டனர்.

News December 13, 2025

சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்!

image

சேலம் புதிய பேருந்து நிலையம் அடுத்துள்ள மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் காம்பவுண்ட் சுவரில் திமுக இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சி.எம்.எஸ். மசூது என்பவரின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டுக்கு குஸ்கா தான்,” என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!