News August 15, 2024
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி 108 ஆம்புலன்ஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செந்தில்குமார், மகாலிங்கம் மருத்துவ உதவியாளர் சிங்காரவேல், சஞ்சீவ்காந்தி உள்ளிட்டோர் சான்றிதழ் பெற்றனர். மேலும் 108 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் உடன் இருந்தார்.
Similar News
News December 9, 2025
தருமபுரி: நாய் குறுக்கே வந்ததால் காவலர் இறப்பு!

தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தமிழழகன்(56). இவர் நேற்று (டிச.07) இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகில் திடீரென நாய் குறுக்கே வந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தமிழழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 9, 2025
தருமபுரி: பிக்கப் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!

தருமபுரியில், கோபாலபுரம் சர்க்கரை ஆலை நான்கு ரோட்டில் பொம்மிடி அருகில் நேற்று பிக்கப் வாகனம் மோதி பெண் உயிரிழந்துள்ளார். இதில், புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு அவரது மகன் அருள், ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும், இதுகுறித்து எ.பள்ளிபட்டியில் நேற்று (டிச.7) போலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
News December 9, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு- இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!


