News April 11, 2025

108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் (12-04-25) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News July 5, 2025

திருச்சி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

image

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு, சமூக நலன் மற்றும் சட்ட உதவி செய்வதற்காக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

image

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை (0431- 2460823) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க…

News July 5, 2025

ஸ்ரீரங்கம் பெருமாள் தரிசனம் இல்லை

image

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஜூலை 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று முழுவதும் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மேலும், 9-ம் தேதி திருப்பாவாடை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு மேல் தான் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலும் என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!