News April 11, 2025
108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் (12-04-25) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 5, 2025
திருச்சி: கார் மோதி ஆசிரியை பலி; டிரைவருக்கு சிறை

இனாம் சமயபுரம் புதூரை சேர்ந்தவர் தனலட்சுமி (60). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் கடந்த 2013-ம் ஆண்டு நெ.1 டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த போது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வழக்கின் விசாரணை ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால் கார் ஓட்டுநர் கஸ்பர் ரெட்டிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜய்ராஜேஷ் தீர்ப்பளித்தார்.
News December 5, 2025
திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் பல்வேறு மோசடிகளில் சிக்கும் நிலையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்காமல் இருக்க வேலைவாய்ப்பு அல்லது முகவர்களின் உரிமத்தை emigrate.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்க கூறியுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கூறியுள்ளது.
News December 5, 2025
திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் பல்வேறு மோசடிகளில் சிக்கும் நிலையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்காமல் இருக்க வேலைவாய்ப்பு அல்லது முகவர்களின் உரிமத்தை emigrate.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்க கூறியுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கூறியுள்ளது.


