News December 4, 2024
108 ஆம்புலன்ஸில் சேர சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் 108 இல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் டிச.7 அன்று திருவாடானை அரசு மருத்துவமனையில் நடக்கும் முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி. நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், படிப்பு முடித்திருக்க வேண்டும். 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 044-2888 8060 தொடர்பு கொள்ளவும்.
Similar News
News December 10, 2025
ராம்நாடு: வரிசையில் நிற்க தேவையில்லை.. இனி ONLINE

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி இங்கு <
News December 10, 2025
ராமநாதபுரம்: டூவீலர் மோதி பரிதாப பலி!

திருவாடனை அருகே கோவனி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (50) நேற்று பொருட்கள் வாங்க கடைக்கு திருச்சி – ராமேஸ்வர சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னாடி டூவீலரில் வந்த ஒருவர் ஆரோக்கியசாமி மீது மோதினார். அவரை மீட்டு தேவகோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவாடனை போலீசார் விபத்து ஏற்படுத்திய முருகேசனை தேடி வருகின்றனர்.
News December 10, 2025
ராமநாதபுரம்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

ராமநாதபுரம் லட்சுமிபுரம் மேல்கரை பகுதியில் உள்ள பேராவூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கருவேல மரங்களுக்குள் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீஸார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் வயது 50 இருக்கும் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


