News April 6, 2025

108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலை வாய்ப்பு

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இன்று (ஏப்.,6) 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 108 வாகன ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. மேலும், தகவலுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News November 14, 2025

குழந்தை கடத்தல் விவகாரம் – எஸ்.பி பாராட்டு!

image

ஈரோடு பவானி லட்சுமி நகரில் பெற்றோருடன் வசித்த 2 வயது குழந்தை, கடந்த அக்டோபர்-16 அன்று நாமக்கல் தம்பதியால் கடத்தப்பட்டது. 25 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட சித்தோடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்கு எஸ்.பி சுஜாதா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News November 14, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஆய்வு

image

ஈரோடு அடுத்த ஆனைக்கால்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. இதனை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News November 14, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு, ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தால் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு,www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அல்லது 0424–2259453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!