News July 31, 2024

102 மனுக்கள் மீது ஒரே நாளில் விசாரணை

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில், இன்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 102 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 3மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 79 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 20 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

Similar News

News August 15, 2025

கோவை: கடன் தொல்லை நீங்க இங்க போங்க!

image

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில், 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை, அஷ்டமி நாளான நாளை (ஆக.16), 11 தீபங்கள் ஏற்றி, வணங்கினால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 15, 2025

பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கிய மேயர்

image

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய பணியாளர்களுக்கு ரூ.2000/- வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் , வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

News August 15, 2025

கோவையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் (ஆகஸ்ட் 15) நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

error: Content is protected !!