News February 28, 2025
சிரியாவில் 1,000 பேர் கொடூர கொலை

சிரியாவில் 1,000க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அல் ஆஸாத் அதிபராக (2000-2024) பதவி வகித்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு, டமாஸ்கஸ் ராணுவ விமான நிலைய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு அண்மையில் தோண்டப்பட்ட குழியில் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 1, 2025
சீமானிடம் விசாரணை நிறைவு

நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இரவு 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தொடங்கிய விசாரணை இரவு 11.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், காவல்துறையினர் அப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் சீமான் பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 1, 2025
மெகுல் சோக்சிக்கு ரத்த புற்றுநோய்?

PNB வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் தலைமறைவாக உள்ளார். விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரை மும்பை விசாரணை நீதிமன்றம் கோரியிருந்தது. இந்நிலையில், ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், இதற்கு ரேடியேஷன் தெரபி சிகிச்சை எடுப்பதால் இந்தியா வர முடியாது. ஆகஸ்ட் வரை தன்னால் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
News March 1, 2025
பணப்பரிவர்த்தனை: வாட்ஸ்அப் விரைவில் புதிய வசதி

கூகுள் பே, போன் பே போன்று வாட்ஸ்அப் சமூகவலைதளமும் பணப்பரிவர்த்தனை வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், குறைந்த அளவு பணப்பரிவர்த்தனைக்காக வாட்ஸ்அப் தற்போது UPI LITE என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதை தற்போது வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. பரிசோதனை முடிந்ததும் அது அறிமுகப்படுத்தப்படும். அது அமலுக்கு வந்தால், விரைந்து பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என கூறப்படுகிறது.