News May 11, 2024
1000 போலீசார் பாதுகாப்பு

குடியாத்தம் கங்கை அம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வருகை தருவார்கள். இதையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாக்க 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் (8 ஜூலை) இன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி, ACTU & IUCAW போலீசார், நேற்று (ஜூலை 07) தேதி வேலூர் விருபாட்சிபுரம் தேசியா மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பெண்கள் தொடர்பான உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
News July 8, 2025
வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 2/2

தமிழ்நாடு வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டம் 2017: *குடியிருப்பவர் வீட்டிற்குள் வீட்டு உரிமையாளர் காலை 7 மணிக்கு முன்பு, இரவு 8 மணிக்கு பின்னர் செல்ல கூடாது. *3 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும். *ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். *ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. *கட்டாயம் ரசிது தர வேண்டும். *ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க