News July 14, 2024
சபாநாயகர் உடன் 100 ஆசிரியர்கள் சந்திப்பு

நெல்லை மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை இன்று (ஜூலை 14) நெல்லையில் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் அளித்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உட்பட 360க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை எந்த விசாரணையும் இன்றி கட்டாய பணி மாற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரினர்.
Similar News
News November 13, 2025
நெல்லை: வேன் கவிழ்ந்து விபத்து; இருவர் பலி

இன்று கன்னியாகுமரி சென்று விட்டு பாட்டபத்து பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று நாங்குநேரி அருகே வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 13, 2025
நெல்லை: PF பிரச்சனைகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தீர்வு

நெல்லை மக்களே, உங்களின் PF கணக்குகளில் பிரச்சனை உள்ளதா? உங்க பேலன்ஸ் எவ்வளவுன்னு தெரியலையா?? இதற்காக அடிக்கடி PF லிங்கை திறந்து பாக்குறீங்களா இனி அது தேவை இல்லை! நமது தென்காசி மாவட்டத்திற்கு என பிரத்யேக 9489987157 வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி PF பேலன்ஸ், பணம் எடுத்தல், PF பிரச்சனைகள் குறித்த சேவைகள் மேற்கொள்ளலாம். உங்க புகாரை நெல்லை PF அதிகாரிகளிடம் நேரடியாக பேசி தீர்வு காணலாம். SHARE பண்ணுங்க
News November 13, 2025
நெல்லை: ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பொட்டல் காலனியில் கடந்த 2017ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக வெற்றிவேல் என்பவரை கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில் மாரிமுத்து, ஜெகதீஷ், சீதாராமன், ஈஷா மற்றும் சுடலைமாடி ஆகிய 5 பேரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் தீர்ப்பளித்து 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.


