News November 30, 2024

படகு கவிழ்ந்த விபத்தில் 100 பேர் மாயம்!

image

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 100க்கு மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். கோகி மாநிலத்தில் இருந்து நைஜர் நோக்கிச் சென்ற படகில் 200க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 27 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Similar News

News April 28, 2025

இந்தியா vs பாக்.. உன்னிப்பாக கவனிக்கிறோம்: சீனா

image

இந்தியா – பாக். இடையேயான பதற்றமான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பாக். வெளியுறவு அமைச்சர் முகமது இஷக்குடன் ஆலோசித்த பின்னர் அவர் கூறும்போது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான பாக். அரசின் விசாரணையை ஆதரிப்பதாகவும், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 28, 2025

விரைவில் உருவாகும் நாட்டின் முதல் AI..!

image

இந்தியாவின் முதல் உள்நாட்டு AI அடித்தள மாதிரியை உருவாக்க சர்வம் AI நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. 67 நிறுவனங்களிடம் இருந்து திட்ட அறிக்கை பெறப்பட்ட நிலையில், மேற்கூறிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வம் AI, கடந்த 2023-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான விவேக் ராகவன், ஆதார் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்.

News April 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 320 ▶குறள்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். ▶பொருள்: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

error: Content is protected !!