News December 22, 2024

100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்த வேண்டும்: RB உதயகுமார்

image

100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற வாக்குறுதியை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால் தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

Similar News

News September 5, 2025

மிலாடி நபி என்றால் என்ன?

image

இறை தூதர் முகமது நபிகளின் பிறந்தநாளை தான் உலகம் முழுவதிலும் உள்ள மிலாடி நபியாக கொண்டாடுகின்றனர். மிலாடி நபி திருநாளை, மிலாத் உன் நபி என்றும் இஸ்லாமியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில், அவரின் வாழ்க்கை, போதனைகள், நல்லொழுக்கம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து, தொழுகை செய்து, நல்ல செயல்களைச் செய்கிறார்கள். அன்பும் அமைதியும் பரப்பும் நாள் என்பதால், இது மிகுந்த புனிதமாகக் கருதப்படுகிறது. SHARE IT.

News September 5, 2025

அதிமுக ஒன்றுபட்டால் நல்லது: பிரேமலதா ஆதரவு

image

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுபோல், அதிமுக ஒன்றிணைந்தால் நல்லதுதான் என பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரம், இவ்விவகாரத்தில் அந்த கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதேபோல், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும், GK வாசனும், அதிமுக மீண்டும் ஒன்றிணைவது வரவேற்கத்தக்கது என செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

News September 5, 2025

EXCLUSIVE: அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கம் ஏன்?

image

<<17618756>>2009-ல் EPS-ஐ <<>>கட்சி பொறுப்பிலிருந்து ஜெயலலிதா நீக்கியதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்கான காரணத்தை விசாரித்த போது, பொய் புகார் ஒன்றில் ஜெயலலிதா அவரை நீக்கியதாகவும், பிறகு உண்மை தெரிந்த உடன் 10 நாட்களில் மீண்டும் இணைத்துக் கொண்டதாகவும் ADMK செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் மீது பல புகார்கள் இருப்பதால் அவர் இதைபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!