News April 20, 2024
100 வயதில் வாக்களித்த பிரமுகரின் தாயார்

நாகை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொச்சியூர் சமத்துவபுரம் வாக்கு சாவடி மையத்தில் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.சுப்பையாவின் மனைவியும் நாகை முன்னாள் எம்பியும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயனின் தாயார் சுப்பம்மாள் நேற்று தனது நூறாவது வயதில் வாக்களித்தார். மேலும், தனக்கு முதன்முதல் வாக்குரிமை பெற்ற போது வாக்களித்தது கதிர் அரிவாள் எனக் குறிப்பிட்டார்.
Similar News
News September 4, 2025
திருவாரூர் மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

திருவாரூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <
News September 4, 2025
திருவாரூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News September 4, 2025
திருவாரூர்: நுகர் பொருள் வாணிப கழகத்தில் தவெகவினர் மனு

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயம் செய்யும் நெல்களை கொள்முதல் நிலையத்தில் வைப்பதற்காக கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி மாவட்ட நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில்நேற்று (செப்டம்பர் 3) திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் மற்றும் திருவாரூர் மாவட்ட தவெகவினர் உடன் இருந்தனர்.