News February 21, 2025

100 பேருக்கு தலா ஒரு லட்சம் பரிசு 

image

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர், அமைப்பு என 100 பேருக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கி தலா ஒரு லட்சம் வீதம் பணமுடிப்பு வழங்க உள்ளது. முன்மாதிரியான பங்களிப்பு அளித்த அமைப்பு, பள்ளி, கல்லூரி, தனிநபர், தொழிற்சாலைக்கு விருது வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு www.tnpcb.gov.in. கரூர் கலெக்டர் தகவல்.

Similar News

News April 20, 2025

கரூரில் இலவச விளையாட்டு பயிற்சி

image

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கையுந்து பந்து, ஜூடோ,கூடைப்பந்து, கபடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகட்திற்கு நேரடியாகவோ அல்லது 7401703493 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

News April 20, 2025

கரூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் 48 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 20, 2025

பித்தளை அண்டா ஏற்படுத்திய ரகளை: 7 பேர் மீது வழக்கு!

image

குளித்தலை அருகே கே.பேட்டையை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் கிருபானந்தன் பட்டவர்த்தியில் உள்ள தனது நண்பர் தாமு வீட்டில் பித்தளை அண்டா திருடி சென்றதாக அப்பகுதியை சேர்ந்தோர் சரமாரியாக அடித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பைக்கை பறித்துச் சென்றுள்ளனர். சாந்தி புகாரில் செல்வா, சேது, கௌதம், அழகேசன், கோபால், துரைப்பாண்டி, விக்னேஷ் ஆகிய 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!