News November 10, 2024
100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொட்டிய தேனீக்கள்

பெருந்துறை யூனியன், மேட்டுப்புதூர் ஊராட்சி கிணிப்பாளையம் பகுதியில் குளக்கரையை பலப்படுத்தும் பணியில் 25க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த மரத்தில் கட்டி இருந்த தேன் கூட்டின் மீது யாரோ கல் வீசியதாக தெரிகிறது. இதனால் தேனீக்கள் பறந்து வந்து பணியில் இருந்த பணியாளர்களை விரட்டி விரட்டி கொட்டி உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Similar News
News August 16, 2025
புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
News August 16, 2025
ஈரோடு: 500 அரசு உதவியாளர் வேலை: நாளையே கடைசி

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.22405 முதல் ரூ.62265 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை ஆக.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 16, 2025
ஈரோட்டில் இன்றுடன் நிறைவு பெறுகிறது

உலகப் புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர் திருவிழா 13ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இன்று குதிரைச் சந்தை மற்றும் திருவிழா நிறைவு பெறுகிறது. குதிரைச்சந்தை, காங்கேயம் காளைகள், ஓங்கோல் இன பசு மாடுகள், கொங்கு காளைகள் போன்ற சந்தையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வாங்கி சென்றனர். குதிரைகள் பத்தாயிரம் முதல் 1 1/4 கோடி வரை விற்பனையானது. புகழ்பெற்ற குதிரை சந்தை இன்றுடன் நிறைவு பெறுகிறது.