News February 27, 2025
100 நாள் வேலை திட்டம்; 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்ய 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் சி.ஓம். பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.பெரம்பலூர், கடலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, புதுக்கோட்டையில் குறைதீர்ப்பாளர்கள் நியமனம்.
Similar News
News March 12, 2026
நெய்க்காரப்பட்டி அருகே வீட்டில் தீ விபத்து

நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இந்த விபத்தில் வீடு முழுவதும் தீக்கிரையாகி அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 12, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தாங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
திண்டுக்கல்லில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)


