News April 15, 2024
100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்வையற்றோர், காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இதையடுத்து பிரெய்லி முறையில் பேலட் தாள்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், வரிசை எண் அச்சடிக்கப்பட்ட விவரங்களை வாசித்து காட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று துவக்கி வைத்தார்.
Similar News
News November 23, 2025
கிருஷ்ணகிரி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
ஓசூர்: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்

ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சீதாராமன் (34), நிலம் வாங்க வேண்டும் என பெண் ஒருவர் அழைத்ததால் பத்தலப்பள்ளி சென்றார். அங்கு ஏழு பேர் கும்பல் கடத்தி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். பின், சீதாராமன் நண்பருக்கு லொகேஷன் அனுப்பியதால், போலீசார் சூடசந்திரம் பகுதியில் ரோந்து வைத்து நான்கு பேரை கைது செய்து சீதாராமனை பத்திரமாக மீட்டனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.
News November 22, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

கிருஷ்ணகிரி, இரவு ரோந்து செலும் காவலர்கள் 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


