News March 4, 2025
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

பர்கூர் அருகே காரகுப்பம் தனியார் மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் ஆகியோர், கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர்.
Similar News
News January 9, 2026
ஓசூரில் 2 பேர் துடிதுடித்து பலி!

ஓசூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் (22), ஆட்டோ மோதி உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், சாமல்பள்ளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி வெங்கடேசன் (22), கார் மோதி பலியானார்; அவருடன் சென்ற சந்தோஷ் காயமடைந்தார். இந்த விபத்துகள் குறித்து அட்கோ மற்றும் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 9, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் மானியம் – ஒரு SMS போதும்!

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 9, 2026
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியது!

கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி அருகே, சிக்னல் இன்றி சரக்கு வேன் திடீரென நின்றதால் கார் மற்றும் லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் போது, மற்றொரு கார் பின்னோக்கிச் சென்றதில் கான்கிரீட் லாரி மீது மோதியது. இவ்வாறு மொத்தம் 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


