News March 4, 2025
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

பர்கூர் அருகே காரகுப்பம் தனியார் மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் ஆகியோர், கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர்.
Similar News
News November 16, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <
News November 16, 2025
கிருஷ்ணகிரி: உறவினருக்கு உருட்டு கட்டையால் அடிஉதை!

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த ஒப்பதவாடி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (42) அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (65) உறவினர்களான இவர்களுக்குள் இருந்த முன் விரோதம் காரணமாக 9ம் தேதி வீட்டின் அருகே நின்ற கருப்பண்ணனை, அங்கு வந்த நாகராஜ் தரப்பினர் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பர்கூர் போலீசார் நாகராஜ், சங்கர், சித்ரா, கவுரம்மாள் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
News November 16, 2025
கிருஷ்ணகிரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


