News May 13, 2024
10 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேட்டில் இன்று (மே 13) ஆட்டு சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு ஆடு 20 ஆயிரம் வரை விலை போனது. மேலும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 21, 2025
சிறுமியை கடத்தி சென்று திருமணம்

வேலூரைச் சேர்ந்த பிரசாத் (27) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 குழந்தை உள்ள நிலையில், 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி அந்த சிறுமி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பிரசாத் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, குகையில் பதுங்கியிருந்த பிரசாத், சூர்யா, விஜய் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News April 20, 2025
வேலூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 0416-2252345, ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0416-2253502, வேலூர் சார் ஆட்சியர் – 9445000417, ▶திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை – 7373704205, ▶மாநகராட்சி ஆணையர் 7397389320, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008159, ▶வேலூா் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) 7402606606, ▶உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – 7824058059, ▶மக்கள் தொடர்பு அலுவலர் – 9498042453. ஷேர் செய்யுங்கள்
News April 20, 2025
வள்ளிமலை கடற்படை வீரர் சாலை விபத்தில் பலி

காட்பாடி அடுத்த வள்ளிமலையைச் சேர்ந்தவர் சுனில்குமார் (24). கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்த இவர், அண்மைக்காலமாக ஒடிசா மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 17ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சுனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சுனில்குமார் உடல் நேற்று (ஏப்ரல் 19) வள்ளிமலைக்கு கொண்டு வந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.