News April 16, 2025

10-ம் வகுப்பு இறுதி தேர்வு 392 பேர் ஆப்சென்ட்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று  இறுதித் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 மையங்களில் இந்த தேர்வை 17,687 பேர் எழுதினர், 374 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். இதேபோல் தனித்தேர்வர்களில் 154 பேரில் 136 பேர் எழுதினர், 18 பேர் ஆப்சென்ட் ஆனார்கள் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News August 9, 2025

வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

image

வேலூரில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350673>>தொடர்ச்சி<<>>

News August 9, 2025

வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

image

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

வேலூரில் மாரத்தான் போட்டி

image

காட்பாடி அருகே உள்ள சித்தூரில் இன்று (ஆகஸ்ட் 9) மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மரத்தான் போட்டியில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் போட்டியாளராக பங்கேற்று ஓடினார். சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி மைதானம் வரை போட்டி நடைபெற்றது. சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!