News April 8, 2025
தம்பியின் கண்முன்னே 10 வயது சிறுமி தற்கொலை!

தாய் திட்டியதற்காக 10 வயது சிறுமி, தம்பியின் கண்முன்னே தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த கெளசல்யா கூலி வேலைக்கு சென்ற நிலையில், தனது மகளிடம் வீட்டு வேலையை செய்யக் கூறியுள்ளார். ஆனால், அதனை செய்யாமல் சிறுமி, விளையாடிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலிலிருந்த ரோஷினி (10) தனது 5 வயது தம்பியின் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொண்டார். பெரும் சோகம்..!
Similar News
News September 14, 2025
ராஜா கை வைத்தால் Wrong-ஆ போகாது: CM

இளையராஜாவின் பாராட்டு விழாவில் அவரிடம் CM ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை வைத்தார். சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இளையராஜா இசையமைத்து ஆல்பமாக வெளியிட வேண்டும் என CM தெரிவித்துள்ளார். அதன்மூலம் தமிழ்ச்சுவை அடுத்த தலைமுறைக்கு பரிமாறப்பட வேண்டும் என்றும், ராஜா கை வைத்தால் அது Wrong-ஆ போவதில்லை என்பதால் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் எனவும் CM கூறினார்.
News September 14, 2025
மனம் கவர்ந்த ரிது வர்மா பிக்ஸ்

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தால் கவனம் ஈர்த்த ரிது வர்மா, தற்போது கண் கவர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்திருக்கிறார். விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு பிறகு இவர், தமிழ் படங்களில் கமிட் ஆகாததற்கு காரணம் தெரியவில்லை. மனதை கொள்ளையடித்துவிட்டால் போதுமா.. எப்போது நிரந்தரமாக குடியேற போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்கின்றனர்.
News September 14, 2025
கமலுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு: ரஜினி

கமல்ஹாசனுக்கு மட்டும் சிறப்பு கவனிப்புடன் இளையராஜா பாடல்கள் அமைத்து கொடுத்தாக ரஜினி தெரிவித்துள்ளார். கமல், ரஜினி, விஜயகாந்த் என பலருக்கு ஒரே டைமில் இளையராஜா இசையமைத்துள்ளார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடல்கள் அமைத்து கொடுப்பதாக இளையராஜா சொல்வார், ஆனால் அதில் உண்மையில்லை என்று ரஜினி கூறியுள்ளார். ‘நாயகன்’ பட தென்பாண்டி சீமையிலே பாடலை அவர் பாடினால், அப்போதே ஆயிரம் பேர் அழுதுவிடுவீர்கள் என்றார்.