News October 9, 2024

மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறை: போலீஸ் எச்சரிக்கை

image

சென்னையில் சமீபகாலமாக ரயில்களிலும், பஸ்களிலும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அராஜகம் அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட, ரூட்டு தல விவகாரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இந்நிலையில், ரயில்களில் இனி ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News August 7, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

image

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி இன்று(ஆக.7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News August 7, 2025

8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதேபோல், கோவையின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

News August 7, 2025

‘கிங்டம்’ படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு?

image

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கில் காவல்துறை, நாதக பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்ததால் நாதக போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டை அணுகியது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு என கூறி, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!