News August 6, 2025
படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
Similar News
News March 3, 2026
காங்கிரஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்

திமுக – காங்கிரஸ் இடையிலான மோதலுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக தொகுதிகளை கேட்டு அடம்பிடித்த காங்கிரஸுக்கு 25 மட்டுமே தரமுடியும் என திமுக பேச்சுவார்த்தை குழு கூறிவிட்டது. இதனால், கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கார்கே அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையில், 29+1 சீட்டுகள் வரை கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
NDA ஆட்சி அல்ல, அதிமுக ஆட்சி.. செல்லூர் ராஜூ

மதுரையில் PM மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பெரியார் படம் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அது குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை; மீடியாதான் அப்படி போட்டு இருக்காங்க என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதேபோல், NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என மோடியின் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்தார்.
News March 3, 2026
வங்கிக் கணக்கில் ரூ.8,000 வந்தது.. இன்ப அதிர்ச்சி

முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல்-ஜூன் காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக 1,62,900 மீனவ குடும்பங்களுக்கு ₹8000 வரவு வைக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பசுந்தேயிலை கிலோவுக்கு 2 ரூபாய் ஆதார விலை என ₹8.53 கோடி நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


