News May 7, 2025
படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
Similar News
News September 14, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டிலை ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.
News September 14, 2025
நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் : IMD

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி காரணமாக 16-ம் தேதி வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், TV.மலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 17-ம் தேதி 8 மாவட்டங்களிலும், 18-ம் தேதி 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று IMD கூறியுள்ளது. 19-ம் தேதி வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
செப்டம்பர் 14: வரலாற்றில் இன்று

*1948 – ஆபரேஷன் போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய தரைப்படை அவுரங்காபாத் நகரைக் கைப்பற்றியது. *1954 – சோவியத் ஒன்றியம் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. *1974 – நடிகை பிரியா ராமன் பிறந்தநாள். *1997 – மத்திய பிரதேசத்தில் ரயில் ஒன்று ஆற்றில் விழுந்து 81 பேர் உயிரிழப்பு. *2005 – விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்தார்.