News June 25, 2024

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் கைது விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 17, 2025

BREAKING: முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

image

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில்<<18308684>> 42 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு<<>> CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய யாத்ரீகர்கள் பலியானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 17, 2025

BREAKING: முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

image

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில்<<18308684>> 42 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு<<>> CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய யாத்ரீகர்கள் பலியானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 17, 2025

ஷேக் ஹசீனா தண்டனை விவரம்

image

மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள வங்கதேச Ex PM ஷேக் ஹசீனா மீது மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. வன்முறையை தூண்டுதல், சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பித்தல் மற்றும் கொலைகளை அவர் அங்கீகரித்ததாக சர்வதேச குற்ற தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதனை ஹசீனா தரப்பு ஏற்காததால் வங்கதேசத்தின் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!