News August 3, 2024

கோர விபத்துகளில் 10 பேர் பலி

image

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த 3 வெவ்வேறு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி 2 மகள்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஆசிரியர் உள்பட 4 பேரும், மதுரையில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை.

Similar News

News December 5, 2025

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி

image

டிச.9-ல் புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை, CM ரங்கசாமியிடம் இருந்து புஸ்ஸி ஆனந்த் நேரடியாக பெற்றுள்ளார். இதன்படி, உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கரூர் துயருக்கு பிறகு, விஜய் பங்கேற்கும் பொதுவெளி அரசியல் நிகழ்வு இது என்பதால், அரசியல் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

News December 5, 2025

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் HAPPY NEWS

image

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் மாணவர்களை சிறப்பிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, பரிசு வெல்லும் மாணவர்களின் போட்டோவை பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்க போட்டோ இடம்பெற கலக்குங்க மாணவர்களே!

News December 5, 2025

விரைவில் திருமணம்? மறுக்காத ரஷ்மிகா

image

ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் பற்றி தகவல்கள் தொடர்ந்து வெளி வருகின்றன. சமீபத்தில் ஹைதராபாத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், 2026 பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் கேட்டபோது ரஷ்மிகா இதனை மறுக்கவில்லை. அதேநேரம், திருமணத்தை பற்றி பேச வேண்டியிருக்கும் போது நாங்கள் பேசுவோம் என பதிலளித்துள்ளார். விரைவில் டும் டும் டும்?

error: Content is protected !!