News August 3, 2024

கோர விபத்துகளில் 10 பேர் பலி

image

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த 3 வெவ்வேறு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி 2 மகள்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஆசிரியர் உள்பட 4 பேரும், மதுரையில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை.

Similar News

News December 10, 2025

டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

image

தனக்கு டைரக்‌ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.

News December 10, 2025

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல்

image

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, EPS தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் தவெக, திமுகவுக்கு செல்வதை தடுக்கவே இந்த முடிவாம்.

News December 10, 2025

ஸ்கூல் பசங்களுக்கான இந்த சட்டம் நடைமுறையில் உள்ளதா?

image

ஸ்கூலுக்கு செல்வதற்குள் பையின் வெயிட்டால் மாணவர்கள் முதுகு வலிக்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வாக, மாணவர்களின் உடல் எடையில் 10% மட்டுமே பையில் சுமந்து செல்ல வேண்டும் என்ற சட்டம் 2020-ல் கொண்டுவரப்பட்டது. எந்த வகுப்பு மாணவர் எவ்வளவு வெயிட்டை பையில் எடுத்து செல்ல வேண்டும் என்பதை அடுத்த படத்தில் கொடுத்துள்ளோம். ஆனால், இது வெறும் சட்டமாக மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!