News August 3, 2024
கோர விபத்துகளில் 10 பேர் பலி

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த 3 வெவ்வேறு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி 2 மகள்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஆசிரியர் உள்பட 4 பேரும், மதுரையில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை.
Similar News
News December 3, 2025
குழந்தைகளுக்கு Non-Veg எப்போது கொடுக்கலாம்?

அசைவ உணவுகள் சத்து நிறைந்தவை என்றாலும் அதை எப்போது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என சில பெற்றோருக்கு தெரிவதில்லை. குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு சரியாக செரிமானம் ஆகாது என்பதால் தாய்ப்பால் தவிர எதுவும் கொடுக்கக்கூடாது. இதன்பின் அவர்களுக்கு அசைவ உணவுகளை கொடுக்கலாம். முதலில் சூப், வேகவைத்து மசித்த கறி ஆகியவற்றை மட்டும் கொடுங்கள். அதீத காரம், உப்பு சேர்க்கவேண்டாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News December 3, 2025
BREAKING: நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கையை அடுத்து நாளை (டிச.4) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக: இன்பதுரை

டிட்வா புயல் & மழை வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக MP இன்பதுரை ராஜ்யசபாவில் குற்றம் சாட்டினார். விவசாய நிலங்கள் மொத்தமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்பே வாய்க்கால்களை தூர்வார EPS பலமுறை வலியுறுத்தியும், அதை செய்ய திமுக அரசு தவறிவிட்டது என சாடிய அவர், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை உடனே கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


