News August 3, 2024
கோர விபத்துகளில் 10 பேர் பலி

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த 3 வெவ்வேறு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி 2 மகள்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஆசிரியர் உள்பட 4 பேரும், மதுரையில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை.
Similar News
News October 30, 2025
ஆணவக்கொலைக்கு எதிராக பேசும் டியூட்: திருமாவளவன்

‘Dude’ படம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசுகிறது என திருமாவளவன் ரிவ்யூ கூறியுள்ளார். தனக்கு துரோகம் இழைத்துவிட்டாள் என்று பழிவாங்க நினைக்காமல், அவள் விரும்புகிறவனோடு வாழட்டும் என்று அவளுக்காக போராடுவது புதிய அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தப் படம் அடுத்த தலைமுறைக்கான தவறான எடுத்துக்காட்டு என மோகன் ஜியும், கலாசார சீரழிவு என பேரரசும் கூறியிருந்தனர். நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News October 30, 2025
மூட்டு வலி நீங்க தினமும் இத பண்ணுங்க!

★இதய ஆரோக்கியம் மேம்பட்டு, மூட்டு வலிமை அதிகரிக்க ‘ஸ்குவாட்ஸ்’ செய்யுங்க ★செய்முறை: கால்களை தோள்பட்டை அகலத்தை விட சற்று அகற்றி வைத்து நிற்கவும். முதுகை நேராக வைத்து, தோப்புக்கரணம் போடுவது போல Chair position-ல் அமரவும். கைகள் முன்னால் நீட்டி வைத்திருப்பது அவசியம். குதிகால்களில் அழுத்தம் கொடுத்து மேலே எழவும் ★இவ்வாறு 2 செட்களாக ஆரம்பத்தில் 15- 20 வரை செய்யலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
News October 30, 2025
விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட 7 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பசும்பொன்னில் அமைத்துள்ள தேவர் நினைவிடத்தில் இன்று CM ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.


