News August 3, 2024

கோர விபத்துகளில் 10 பேர் பலி

image

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த 3 வெவ்வேறு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி 2 மகள்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஆசிரியர் உள்பட 4 பேரும், மதுரையில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை.

Similar News

News December 8, 2025

நாளை பள்ளிகள் விடுமுறையா?.. அரசு அறிவிப்பு

image

விஜய் பொதுக்கூட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என SM-ல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி நேரம் தொடங்கிய பின் விஜய் வரவும், பள்ளி முடிவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார். அதனால், நாளை விடுமுறை இல்லை. அதேநேரம், பொதுக்கூட்ட பகுதியில் ஒரேயொரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை.

News December 8, 2025

உங்களுக்கு ப்ரோமோஷன் வேண்டுமா? இதுதான் முக்கியம்!

image

70-20-10 என்ற முறையில்தான் ப்ரோமோஷனுக்காக பரீட்சை நடக்கிறது. இதில் 70% பணி அனுபவம், 20% புதிய ஆலோசனைகளை வழங்குவது, 10% பாடங்கள் வழி கற்கும் திறன் போன்றவை அடங்கும். இதுமட்டுமல்லாமல், ப்ராஜெக்ட்டை கையாளுதல், அணியை நிர்வகித்தல், ஜூனியருக்கு ஆலோசனை&பயிற்சி வழங்குதல், நெருக்கடி நேரத்தில் எடுக்கும் முடிவு போன்றவற்றில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்கிறார்கள்.

News December 8, 2025

மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

டெல்டா, தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக நீடித்த மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச.14 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை(டிச.9) மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோர் கவனமாக இருங்கள்!

error: Content is protected !!