News April 30, 2024
10 மாவட்டங்களில் நாளை அனல் பறக்கும்

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர், ஈரோட்டில் வெயில் அதிகமாக இருக்கும். இதேபோல, கோவை, நாமக்கல் உள்பட 10 மாவட்டங்களில் வழக்கமான அளவைவிட வெயில் சற்று அதிகரித்துக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Similar News
News March 12, 2026
சட்டமன்ற தேர்தல்களில் மதிமுக கடந்து வந்த பாதை!

1994-ல் திமுகவுக்கு மாற்று என தொடங்கப்பட்ட மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் 4 சீட்களுக்கு அடைபட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மதிமுக போட்டியிட்ட இடங்களின் விவரம்: *1996 – 177(தனி அணி) *2001 – 211(தனி அணி) *2006 – 35(அதிமுக கூட்டணி) *2011- புறக்கணிப்பு *2016 – 28(மக்கள் நலக்கூட்டணி) *2021 – 6(திமுக கூட்டணி) *<<19357260>>2026 -4(திமுக கூட்டணி)<<>>. மதிமுகவின் எதிர்காலம் பற்றி உங்க கருத்து?
News March 11, 2026
சற்றுமுன்: சீமானுடன் இணைந்தார்

2026 தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், நாம் தமிழருக்கு ராஷ்டிரிய உலமா கவுன்சில் மற்றும் தமிழக சுன்னத் ஜமாத் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. நிர்வாகிகளுடன் சேர்ந்து சீமானை நேரில் சந்தித்த கவுன்சிலின் மாநில தலைவர் அக்ரம் கான், 234 தொகுதிகளிலும் NTK வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.
News March 11, 2026
உங்க கனவில் பாம்பு வருதா.. இதுதான் அர்த்தம்

சிலருக்கு கனவில் அடிக்கடி பாம்பு வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகுதிசை, ராகுபுத்தி நடக்கும்போது அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?


