News April 18, 2025
10 வயது சிறுமிக்கு தொந்தரவு – கொத்தனார் மீது வழக்கு

சிங்கம்புணரி அருகே உள்ள நடு அம்மாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் கொத்தனார் (45) . திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேலை செய்யும் போது, அப்பகுதியில் உள்ள வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 7, 2025
சிவகங்கை: இலவச வேலை வாய்ப்பு பயிற்சி..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் சார்பில், இலவச வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 21 வயது முதல் 30 வயது வரை உள்ள டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது உணவு மற்றும் இருப்பிடம் அரசு சார்பில் வழங்கப்படும். பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவுடன், வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி <
News August 7, 2025
சிவகங்கை: குழந்தை வரம் அருளும் கோயில்

சிவகங்கை, பட்டமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். கடைசி வியாழன் தோறும் மூலவருடன் கூடிய ஆலமரத்தை 108 முறை சுற்றி வழிபட்டால் விரும்பிய பெண் மனைவியாக அமைவாள் என்பது ஐதீகம். 5 முறை ஆலயத்தை சுற்றி அங்கபிரதட்சணம் செய்து குழந்தை பேறு பெற்றவர்களும் அதிகம். நீங்களும் ஒருமுறை VISIT பண்ணி பாருங்களேன்.
News August 7, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

ஆடி மாத கோயில் விழாக்களை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இராமேஸ்வரம் உள்ளிட்ட ஆலய ஸ்தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். எனவே பயணிகள் கோரிக்கைக்கிணங்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக இயங்கி வந்த ஹுபிளி – ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் இம்மாதம் ஆகஸ்ட்-31 வரை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.