News April 16, 2025

10-ம் வகுப்பு இறுதி தேர்வு 392 பேர் ஆப்சென்ட்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று  இறுதித் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 மையங்களில் இந்த தேர்வை 17,687 பேர் எழுதினர், 374 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். இதேபோல் தனித்தேர்வர்களில் 154 பேரில் 136 பேர் எழுதினர், 18 பேர் ஆப்சென்ட் ஆனார்கள் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 19, 2025

வேலூர் மக்களே கனமழை எச்சரிக்கை!

image

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூரில் மாவட்டத்தில் இன்று (செப்.,19) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்! கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே

News September 19, 2025

வேலூர்: 670 போதை மாத்திரைகள் பறிமுதல்

image

காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நேற்று, காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவலின் பேரில் காட்பாடி ரயில்வே நிலைய பார்க்கிங்கில் சந்தேகப்பட்ட வகையில் நின்றிருந்த 18பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்களிடம் இருந்து 670 போதை மாத்திரைகள் சட்ட விரோதமாக வாங்கி வந்து மற்றவர்கள் விற்பனை செய்வது உறுதியானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 16 பேரை கைது சிறையில் அடைத்தனர்.

News September 19, 2025

வேலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!