News September 1, 2025
10 மற்றும் +2 மாணவர்களுக்கு கற்றல் கையட்டினை வெளியிட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவ-மாணவியர்களுக்கான “கற்றல் கையேட்டினை” தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று வழங்கினார்கள்.
Similar News
News September 4, 2025
தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, தஞ்சையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 4, 2025
தஞ்சை மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

தஞ்சை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <
News September 4, 2025
தஞ்சையில் கூட்டுறவு வங்கிகளில் கடன் தீர்வு திட்டம்

தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் 2022, டிசம்பா் 31ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 23 க்குள் கூட்டுறவு சங்கங்களை அணுகி பயன்பெறுமாறு தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT