News March 15, 2025
10 சவரன் செயினை திருடிய மர்ம நபர்கள்

அம்பூர்பேட்டையைச் சேர்ந்த ஷீலா (60), தனது மருமகள் சிந்து (34) உடன் நேற்று முன்தினம் (மார்.13) இரவு ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
Similar News
News September 12, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு இன்று (செப்.12) எஸ்.பி அலுவலகம் சார்பில் சமூக வலைத்தள பக்கத்தில் எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களின் இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் போது அதிலுள்ள storage space களில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற திருட்டு சம்பவம் நடைபெறுவதால் உஷாரா இருங்க. ஷேர் பண்ணுங்க.
News September 12, 2025
திருப்பத்தூர்: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

திருப்பத்தூர் மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த <
News September 12, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (செப். 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்களை செய்யலாம். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.