News April 17, 2025

10 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ. மழை

image

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதிதான் 100 மி.மீ. மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, தற்போது 10 ஆண்டுகள் கழித்து நேற்று (ஏப்16) பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Similar News

News April 19, 2025

AC ரயிலின் கட்டண விவரம்

image

சென்னையில் இன்று தொடங்கிய AC வசதியுடன் கூடிய புறநகர் ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.105 டிக்கெட் கட்டணம் ஆகும். சென்னை கடற்கரையில் இருந்து தம்பரத்திற்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். தாம்பரம் – எழும்பூருக்கு ரூ.60, செங்கல்பட்டு – எழும்பூருக்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். ஷேர் செய்யுங்கள்.

News April 19, 2025

AC புறநகர் ரயில் சேவை தொடங்கியது

image

சென்னையில் முதல்முறையாக AC வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை முதல் AC ரயில் இன்று புறப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45 மணி, இரவு 7.35 மணிக்கு இந்த AC ரயில் சேவை இருக்கும். இன்று காலை 7 மணிக்கு புறப்பட்ட AC ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். ஷேர் செய்யுங்கள்

News April 19, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (18.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

error: Content is protected !!