News April 16, 2025
10-ம் வகுப்பு இறுதி தேர்வு 392 பேர் ஆப்சென்ட்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று இறுதித் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 மையங்களில் இந்த தேர்வை 17,687 பேர் எழுதினர், 374 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். இதேபோல் தனித்தேர்வர்களில் 154 பேரில் 136 பேர் எழுதினர், 18 பேர் ஆப்சென்ட் ஆனார்கள் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News September 19, 2025
வேலூர் மக்களே இதை டவுன்லோட் பண்ணாதீங்க!

பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு போக்குவரத்து அபராத செலான், வங்கி பணப்பரிவர்த்தனை, செல்போன் நிறுவனங்களின் பெயரில் வரும் குறுஞ்செய்தி பின்னால் ஏ.பி.கே. பைல் இருந்தால் அந்த இணைப்பை திறக்க கூடாது. இதனால் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பணமோசடி நடைபெறும். ஏ.பி.கே.பைல் இணைப்பை திறந்துவிட்டால் உடனடியாக வேலூர் சைபர் கிரைம் எண்ணிற்கு (1930) புகார் அளிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர.
News September 19, 2025
வேலூர்: மாதம் ரூ.15,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

வேலூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் TELEMARKETER பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, B.TECH படித்திருக்க வேண்டும். 25-35 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21. விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 19, 2025
வேலூர்: கஷ்டங்களை நீக்கும் கால பைரவர்!

வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். *கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்*