News March 29, 2024

10 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் கடும் அவதி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மின் ஊழியர்கள் இரவு 11 மணிக்கு மேல் மின் இணைப்பை சரி செய்தனர்.

Similar News

News September 18, 2025

திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், இன்று (செப்.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புக்கொள்ளலாம்

News September 17, 2025

ஆம்பூர் கலவர வழக்கு: 7 பேர் ஜாமீனில் விடுதலை

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கடந்த மாதம் (ஆக.28) நடைபெற்ற கலவர வழக்கில், கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு, இன்று (செப்.17) சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமினில் விடுவிக்கப்பட்டவரகள்:
1. ஃபைரோஸ்
2. அதீக் அஹமது
3. சான் பாஷா
4. முனீர்
5. தப்ரேஸ்
6. நவீத் அஹமது
7. அயாஸ் பாஷா

News September 17, 2025

திருப்பத்தூர்: 10th போதும், மத்திய அரசு வேலை!

image

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 1.கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, 2.சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100, 3.வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு) கடைசி தேதி: செப்டம்பர் 28 <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!