News August 8, 2024
10 நாட்களில் 6,310 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், கடந்த 10 நாட்களாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தத் தீவிர தூய்மைப் பணிகளில், சுமார் 6,310 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 17, 2025
சென்னை அருகே மகளுக்கு திருமணம்.. தந்தை கைது

பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தம்பதி கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தந்தையுடன் இருக்கும் தனது 2வது மகளுக்கு அவரது கணவர் திருமணம் செய்து வைப்பதாக தாய் எம்.பி.கே நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நேற்று கொடுங்கையூர் பகுதியில் தந்தையுடன் இருந்த 14 வயது சிறுமியை மீட்டதோடு, சிறுமிக்கு நடக்க திருமணத்தையும் தடுத்து நிறுத்தி காப்பகத்தில் தங்க வைத்தனர்.
News November 17, 2025
13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புரளி என உறுதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் சிஆர்பிஎப் அலுவலகம் என 13 இடங்களுக்கு மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஜிபி அலுவலகம் தகவல் வழங்கியதும், காவல்துறையினர் சம்பவ இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், அவரை புரளி என தெரிவித்தனர்
News November 17, 2025
13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புரளி என உறுதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் சிஆர்பிஎப் அலுவலகம் என 13 இடங்களுக்கு மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஜிபி அலுவலகம் தகவல் வழங்கியதும், காவல்துறையினர் சம்பவ இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், அவரை புரளி என தெரிவித்தனர்


