News April 21, 2025
10 ஆவது படித்திருந்தால் போதும், உடனே அப்ளை பண்ணுங்க..

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்
Similar News
News November 28, 2025
திருச்சியில் தலைதூக்கிய புதிய மோசடி

திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மற்றும் பான்கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக ரூ.9 கோடி கட்ட வேண்டும் எனவும், அந்த தொகையை கலைவாணி தான் கட்ட வேண்டுமென, அவர் கணக்கு வைத்துள்ள வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கலைவாணி திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓயாமரி வழியாக மார்க்கெட் செல்லும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஓடத்துறை மேம்பாலம் வழியாக சிந்தாமணி பஜார், சங்கரன்பிள்ளை சாலை வழியாக செல்லலாம். இபி ரோடு வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பழைய பால்பண்ணை, மார்க்கெட் வழியாக செல்லலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


