News April 28, 2025

10 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

image

நாமக்கல்: குமாரபாளையத்தில் 2012ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், திருப்பத்தூர் மாவட்டம் கோட்டான்கல்லூர், பெரம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாது என்கிற கொர மாது (வயது 47). இவர் 2015ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கோவையில் கைது செய்தனர்.

Similar News

News April 28, 2025

நாமக்கல்: முட்டை விலை 10 பைசா உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப் 28) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

News April 28, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-28) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 28, 2025

கடன் சுமை நீக்கும் நாமக்கல் கோயில்!

image

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!