News March 15, 2025

10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தயாராகும் கல்வித்துறை

image

திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 30,235 மாணவர்கள், 1,097 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். 108 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1,780 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் www.dge.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திலோ அல்லது ஒரு நாள் முன்பே பெறலாம்.

Similar News

News March 15, 2025

திருப்பூர் அருகே கொலை: வாக்குமூலம் 

image

அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி(85).விவசாயி. இவரது மனைவி பர்வதம் (75). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ் வழக்கில் உறவினரான ரமேஷ் என்பவரை தகாத வார்த்தைகளால்  திட்டியதால் கொலை செய்ததாக தெரிவித்தார்.

News March 15, 2025

திருப்பூர் அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மார்ச் 29ஆம் தேதி காலை 10.30 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

திருப்பூர்:பின்னலாடை தொழிற்கான அறிவிப்பு எதுவும் இல்லை

image

தமிழக அரசு பட்ஜெட்டில் பின்னலாடை தொழிலுக்கான அறிவிப்பு இடம்பெறாததால் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில கோரிக்கையின் போது திருப்பூருக்கு ஏதாவது அறிவிப்பு வருமா என தொழில் துறையினர் காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்தமாக தொழில்துறைக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள பட்ஜெட்டாக இருக்கிறது. ஆனால் தனியாக பின்னலாடை தொழிலில் உள்ள நிறுவனங்களின் கோரிக்கைகள் இடம் பெறவில்லை என தெரிவித்தனர்.

error: Content is protected !!