News May 14, 2024
10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள தனியார் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்தவர் லாவணிதேவி (17). இவர் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று (மே 14) சேண்பாக்கம் கோயில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
வேலூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 0416-2252345, ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0416-2253502, வேலூர் சார் ஆட்சியர் – 9445000417, ▶திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை – 7373704205, ▶மாநகராட்சி ஆணையர் 7397389320, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008159, ▶வேலூா் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) 7402606606, ▶உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – 7824058059, ▶மக்கள் தொடர்பு அலுவலர் – 9498042453. ஷேர் செய்யுங்கள்
News April 20, 2025
வள்ளிமலை கடற்படை வீரர் சாலை விபத்தில் பலி

காட்பாடி அடுத்த வள்ளிமலையைச் சேர்ந்தவர் சுனில்குமார் (24). கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்த இவர், அண்மைக்காலமாக ஒடிசா மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 17ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சுனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சுனில்குமார் உடல் நேற்று (ஏப்ரல் 19) வள்ளிமலைக்கு கொண்டு வந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
News April 20, 2025
வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் மகிமை

வேலூர் விரிஞ்சிபுரத்தில், 1,000 ஆண்டுகள் பழைமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, பெண்கள் கோயில் குளத்தில் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க