News May 11, 2024

10ஆம் வகுப்பில் தமிழில் சிறப்பிடம்: சீமான் வாழ்த்து

image

நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி மாணவி பா.கிருத்திகா தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு தனது பாராட்டினை தெரிவித்தாா். மாணவி கிருத்திகாவின் தந்தை பாலசுப்பிரமணியன் வாடகை சரக்கு வாகன ஓட்டுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 10, 2026

பெரியகுளம்: இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை

image

தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி. கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜா கத்தியால் தங்கமாரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

News February 10, 2026

தேனி: கஞ்சா வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது

image

உத்தமபாளையம், கம்பம் பகுதிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக SP-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது உத்தபாளையம்-குமுளி பைபாஸ் சாலையில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சாக்கு பைகளில் 21 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் தொடர்பாக வனிதா, அகில் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 10, 2026

தேனி: 20.755 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 20.755 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!