News May 7, 2025
1 பவுன் தங்கம் ₹1.10 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு

அடுத்தாண்டு அட்சய திருதியைக்கு தங்கம் விலை ஒரு பவுன் ₹1.10 லட்சமாக அதிகரிக்கும் என நகைக் கடை வணிகர்கள் கணித்துள்ளனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளைவிட இந்தாண்டு அட்சய திருதியைக்கு 35% அளவுக்கு ஒரு பவுனின் விலை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விலை எவ்வளவு அதிகரித்தாலும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Similar News
News November 22, 2025
பிரபல தமிழ் நடிகை மரணம்.. அதிர்ச்சித் தகவல்

தவசி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதியுஷா மரண வழக்கு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 2002-ல் காதலருடன் விஷமருந்தி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகள் கேங்க் ரேப் செய்யப்பட்டதாக பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது மார்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். <<18341222>>நடிகையின் மரணம் தொடர்பான வழக்கு<<>> நேற்று SC-ல் விசாரணைக்கு வந்திருந்தது.
News November 22, 2025
திமுகவின் முட்டாள்தனத்தை பார்ப்போம்: அண்ணாமலை

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியதாக உதயநிதி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், நாட்டில் தமிழ் பல்கலைகளை விட சமஸ்கிருத பல்கலைகள் அதிகமாக இருப்பதால் அதிக நிதியை பெறுவதாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். திமுகவால் வளர்ச்சி பற்றி பேச முடியாது என்று விமர்சித்த அவர், அடுத்த 6 மாதங்களுக்கு மொழி, வடக்கு, தெற்கு போன்ற முட்டாள்தனங்களை பார்க்கலாம் என்றும் சாடியுள்ளார்.
News November 21, 2025
நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

2021 தேர்தல் போலவே 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.


