News May 7, 2025

1 பவுன் தங்கம் ₹1.10 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு

image

அடுத்தாண்டு அட்சய திருதியைக்கு தங்கம் விலை ஒரு பவுன் ₹1.10 லட்சமாக அதிகரிக்கும் என நகைக் கடை வணிகர்கள் கணித்துள்ளனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளைவிட இந்தாண்டு அட்சய திருதியைக்கு 35% அளவுக்கு ஒரு பவுனின் விலை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விலை எவ்வளவு அதிகரித்தாலும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Similar News

News November 24, 2025

மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறையா? வந்தது அப்டேட்

image

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதனால் விடுமுறை அளிக்காத மாவட்டங்களுக்கு மதியத்திற்குமேல் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 24, 2025

சற்றுமுன்: புஸ்ஸி ஆனந்திடம் சிபிஐ விசாரணை

image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பரப்புரையின்போது விஜய் தாமதமாக வந்தாரா, பரப்புரை நடைபெற்ற இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டதா, சம்பவம் நடந்தபோது அங்கிருந்தது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 24, 2025

இந்திய பெண் உளவாளியை கௌரவித்த ஃபிரான்ஸ்

image

2-ம் உலகப்போரின் போது, ஹிட்லர் படைகளுக்கு எதிராக உளவு பார்த்த, பிரிட்டிஷ் – இந்திய வம்சாவளி நூர் இனாயத் கானுக்கு தபால் தலை வெளியிட்டு ஃபிரான்ஸ் கவுரவித்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கான், ஃபிரான்ஸ் நினைவு அஞ்சல் தலையால் கௌரவிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார். நாஜி ஆக்கிரமிப்பு ஃபிரான்ஸில் ஊடுருவி உளவு பார்த்ததாக 1944-ம் ஆண்டில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

error: Content is protected !!