News March 23, 2025
1 மாம்பழம் ரூ.10,000… விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

கஷ்டப்பட்டு விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பதை பார்த்திருப்போம். அதற்கு மாறாக தெலங்கானா விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயி சுமன்பாய், உலகிலேயே விலையுயர்ந்த 10 மியாசாகி வகை மாமரக் கன்றுகளை நட்டுள்ளார். தற்போது, அவை காய்க்கத் தொடங்கியுள்ளன. மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.10,000 வரை விலை போகிறதாம். சுமன்பாய் காட்டில் பண மழைதான்!
Similar News
News March 25, 2025
நாளை OTTயில் வெளியாகிறது ‘முஃபாசா’

‘தி லயன் கிங்’ திரைப்படத்தின் முன்கதையான (Prequel) ‘முஃபாசா’ நாளை OTTயில் வெளியாகவுள்ளது. Jio Hostarல் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த இப்படம், OTTயில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
News March 25, 2025
விமானத்தில் தப்ப முயன்ற செயின் பறிப்பு திருடர்கள்!

சென்னை திருவான்மியூர் பகுதியில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் 7 பெண்களிடம் இருந்து 2 இளைஞர்கள் செயின் பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சென்னை ஏர்போர்டுக்குள் விரைந்த போலீஸ், அங்கே டிப்–டாப் உடையில் இருந்த 2 பேரை கைது செய்தது. அவர்கள் வேறு யாருமல்ல; செயின் பறிப்பு கொள்ளையர்கள் தான். விமானத்தில் எஸ்கேப் ஆகும் அளவுக்கு காஸ்ட்லியான திருடர்கள்!
News March 25, 2025
ஆவின் நெய்: அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்!

ஆவின் நெய் உலகத் தரம் வாய்ந்தது. அதனை அமெரிக்கர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மற்ற நெய்களை விட, ₹50 அதிகமாக இருந்தாலும், அமெரிக்கர்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் ஆவின் மூலம் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.